அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்] எல்லாம் புகழும் இறைவனுக்கே!!!.. டுடே எக்ஸ்பிரஸ் நியூஸ் இணையதளம் வருகைக்கு நன்றி !!!....

ஞாயிறு, ஜனவரி 12, 2014

மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு புதிய வியூகம் அமைத்து இருக்கிறது தேமுதிக:விஜயகாந்த்



மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு தேமுதிக புதிய வியூகம் அமைத்து இருக்கிறது என்று, அந்த கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் இன்னமும் கூட்டணி கட்சிகள் உறுதி செய்யப்படவில்லை. தேமுதிகவுக்கு காங்கிரஸ், பாஜக, திமுக, மதிமுக அழைப்பு விடுத்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு தேமுதிக புதிய வியூகம் அமைத்து இருக்கிறது என்று சஸ்பென்சுடன் கூறி உள்ளார் விஜயகாந்த்.

இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தமது மனைவி பிரேமலதவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த், மக்களுக்கு இலவசங்கள் தேவையில்லை என்றும், இது தேர்தல் வெற்றிக்கு உதவாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் கோர்வையான பேச்சுக்களால் மக்களை ஏமாற்றிவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.இதை எல்லாம் கருத்தில் கொண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற தேமுதிக புதிய வியூகம் அமைத்து இருக்கிறது என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார். 

சனி, ஜனவரி 11, 2014

60 ஆண்டுகளாக குளித்தே அறியாத ஈரானின் ‘கப்பு மனிதர்’

60 ஆண்டுகளாக குளித்தே அறியாத ஈரானின் ‘கப்பு மனிதர்’
டெஹ்ரான், ஜன. 11-

தினந்தோறும் குளிக்காவிட்டால் நம்மில் பலருக்கு தங்களைப் பற்றியே அருவெறுப்புணர்வு தோன்றிவிடும். இன்னும் சிலருக்கு காலை, மாலை இரு வேளையும் குளிக்கவில்லை என்றால் எதையோ பறிகொடுத்தது போல் ஆகிவிடும்.

உலகின் மனித நியதி இவ்வாறிருக்க, ஈரான் நாட்டில் வாழும் 80 வயது முதியவர், கடந்த 60 ஆண்டுகளாக குளிப்பதற்கு கெடு சொல்லிக்கொண்டே காலத்தை கடத்தி வந்துள்ளார் என்ற விசித்திர செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

மதச்சார்பற்ற கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தோம்: விஜயகாந்தை சந்தித்த பிறகு தொல் திருமாவளவன் பேட்டி


 சென்னை,                                                                                                                                                              
தேமுதிக தலைவர் விஜயகாந்தை விடுதலை சிறுதைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்  இன்று  சந்தித்து பேசினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக  அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் யூசுப் இல்லத் திருமணவிழா அழைப்பிதழ் வழங்க தொல் திருமாவளவன் சென்றதாக கூறப்பட்டது.

சனி, அக்டோபர் 26, 2013

வறட்டு இருமல் குணமாக

 Matulampalam juice, ginger juice mixed with an equal, with which to eat honey, chronic cough cured with crude.
மாதுளம்பழச் சாறுடன் சமமாக இஞ்சி சாறு கலந்து, இத்துடன் தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும். நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும். சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு ஆப்பிள், அல்லது வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் வாழைத்தண்டு ஜூஸ் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் நல்லதல்ல.

ஆரோக்கிய உடலுக்கு தண்ணீர் அவசியம்!

Without enough water in the body the energy needed by the body to function well is not tired.
உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல் சோர்வுடன் இருக்கும்.  இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது அதனால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு உடல் வறட்சி  அதிகமாகி, தாகத்தையும் தாண்டி அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால் அது உணவு உண்பதற்கான  அறிகுறி அல்ல. 

வெள்ளி, அக்டோபர் 25, 2013

உடல் பருமன் எதனால் ஏற்படுகிறது.



உடல் பருமனா உலக சுகாதார நிறுவனம் (WHO)அறிக்கையின் படி உலகில் வேகமாக பெருகி வரும் ஆபத்தான சர்க்கரை நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பது உடல் பருமன் என்னும் Obesity. இது நேரடியாக இல்லாவிட்டாலும் பல்வேறு நோய்களுக்கு ஆணி வேர் என்பதால் நிச்சயம் அனைவரும் சிறுவயது முதல் இளம் வயதினராலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். முப்பது நாட்களில் எடை குறைய எளிய முறை என்ற விளம்பரத்தைப் பார்த்து சிலர் அதை பின்பற்றினாலும் முற்றிறும் எடை குறைய வாய்ப்பில்லை என்று விரக்தி அடைபவர்கள் தான் அதிகம்.

ஞாயிறு, ஜூன் 30, 2013

ஆரோக்கிய இதயம் தரும் செம்பருத்தி


Hibiscus Flower in achieving better health for the body of the flowers. Strongly reduces blood pressure by drinking the tea or juice.

செம்பருத்தியின் பூக்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் சிறந்ததாகும். இப்பூக்களின் தேநீர் அல்லது ஜூஸ் பருகுவதன் மூலம் இரத்த அழுத்தம்  குறைகிறது.. ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் கொண்டுள்ளதால் உடலில் உள்ள செல் சேதத்தை எதிர்த்து போராடுகிறது. இது இருமல், முடி  உதிர்தல் போன்ற சிகிச்சைக்கு உதவி புரிகிறது மேலும் முடி அதிகமாக வேண்டும் என விரும்புபவர்கள் செம்பருத்தியின் எண்ணெய், ஷாம்பு,  கண்டிஷனர் போன்று உபயோகப்படுத்தலாம்.

Photobucket